Lyrics
யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே -2
செடியின்றி தள்ளாடும் கொடியினை போல
என் வாழ்வு தள்ளாடுதே
தாங்கிட நீர் வாருமே
1. என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீர் -2
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன் -2
2. தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
தந்த பின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்
3. பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
கண்ணருகே இமைப்போல
என்னருகே நீர் வாருமே
Details
- Numeric ID
- 930
- Song ID
- yaarum-thunaiellaiye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0