Lyrics
யாருண்டு எனக்கு
எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத் தவிர ஏதும்
சொந்தம் இல்லையே
ஆகோரின் பள்ளத்தாக்கைக் கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே
அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்
1. பொய் சொல்ல தேவன் மனிதனும் அல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனும் அல்ல
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறப்பவர்
2. செத்தவனப் போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறந்தவர்
Details
- Numeric ID
- 6064
- Song ID
- yaarundu-enakku
- Views
- 1
- Downloads
- 1