Lyrics
ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)
1. அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
2. யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார்
Details
- Numeric ID
- 4455
- Song ID
- yaen-azhukintrai-kannae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0