Lyrics
உம்மோடு நான் நடந்தால்
வழுவாமல் நடப்பேன்
இருள் சூழ்ந்த பாதையிலும்
கால் பிசகாது நடப்பேன் – 2
யாவே ஏலோகிம்
எந்தன் தேவன் நீர் – 2
உம் சத்தம் நான் கேட்டிடால்
என் வாழ்க்கையே மாறிடும்
கரைதெரியா சூழலிலும்
கரம்பிடித்து கரை சேர்ப்பீர் – 2
யாவே சிட்கேனு
நீதியின் தேவன் நீர் – 2
உம் சித்தம் நான் செய்திட்டால்
உம் பிள்ளையாக மாறிடுவேன்
தோற்றுப்போன சூழலிலும் என்னை
ஜெயமாக எழும்பச் செய்வீர் – 2
யாவே ஷம்மா
கூடவே இருக்கின்றீர் – 2
Details
- Numeric ID
- 457
- Song ID
- yahweh-elohim-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0