Lyrics
இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர் (2)
இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே (2)
இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே
வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே (2)
வாழ்வை அலட்சியம் செய்தவர்கள் (2)
வியந்து பார்க்க உயர்த்தினீரே
வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
வீணாக நாட்கள் கடந்திட்டாலும்
விண்ணவர் வார்த்தை புடமிட்டதே (2)
வருத்தம் யாவும் மறக்கச் செய்து (2)
வலுவாய் பெருகச் செய்தவரே
நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
நம்பிக்கையெல்லாம் அகன்றாலும்
நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே (2)
நித்தியமான ஆசீகளால் (2)
நிறைத்து நிலைக்கச் செய்வீரே
Details
- Numeric ID
- 1884
- Song ID
- yeasaiyah-ezhumbiduveer-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1