Lyrics
ஏங்குகிறோம் உம் முகம்
காணே இந்த கண்களால்
ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே
ஏங்குகிறோம் உம் அன்பின்
பிரசன்னத்தை அடைந்திட்டே
ஏங்குகிறோம் உம் வீட்டில் நிலைத்திடவே!
ஏக்கத்தோடு நிற்கிறோமே
வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
செங்கடல் பிளந்தது உம் கரமே
எரிகோவை சரித்து உம் கரமே
கன்மலை பிளந்தது உம் கரமே
எலியாவின் தேவனும் நீரே
1. ஏங்குகிறோம் உம் வல்ல கரத்தால் எழுந்திட
ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே
ஏங்குகிறோம் உம் தூய ஆவியால் இயங்கிடே
ஏங்குகிறோம் உலகத்தை ஜெயித்திடவே
ஏக்கத்தோடு நிற்கிறோமே
வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
2. கர்த்தரின் கரம் இன்றும் குறுகிடவில்லை
கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை
கரத்தின் சத்துவதை அறிந்தவர் யாரும்
கைவிடப்படுவதில்லை
செங்கடல் பிளந்தது உம் கரமே
எரிகோவை சரித்து உம் கரமே
கன்மலை பிளந்தது உம் கரமே
எலியாவின் தேவனும் நீரே – 2
Details
- Numeric ID
- 4468
- Song ID
- yengugirom-um-mugam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0