Yeshuve Maranathai Jaithavare இயேசுவே மரணத்தை ஜெயித்தவரே
இயேசுவே மரணத்தை ஜெயித்தவரே
Lyrics
ஆராதனைக்கு என்றும் பாத்திரரே
யாரிலும் மேலான உன்னதரே
சேராபீன்கள் நித்தம் வாழ்த்தி நிற்கும்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
இயேசுவே மரணத்தை ஜெயித்தவரே
இயேசுவே மகிமையில் வாழ்பவரே
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமமே
மார்பதில் பொன்கச்சை அணிந்தவரே
அக்கினி ஜூவாலை போன்ற கண்கள் உள்ளவரே
பெருவெள்ள இரைச்சல் போல் சத்தம் உள்ளவரே
சூரியனைப்போல பிராகாசிப்பவரே
ஏழு நட்சத்தரத்தை பிடித்தவராய்
தாவீதின் திறவுகோல் உடையவரே
நீர் அடைத்தால் அதை திறப்பவன் யார் ?
நீர் திறந்தால் அதை அடைப்பவன் யார் ?
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே்
முதலும் முடிவும் ஆனவரே்
யூதா கோத்திரத்தின் சிங்கம் நீரே
புத்தகம் திறந்திட பாத்திரரே
Details
- Numeric ID
- 549
- Song ID
- yeshuve-maranathai-jaithavare-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1