Lyrics
இயேசு என்று சொல்லுவோம்
வேறு வழியில்லையே
இன்றே விடுதலை தந்திடுவார்
இயேசுவே இயேசுவே -4
1. பாவம் என்னை கவர்ந்து இழுக்கையிலே
இயேசுவே என்று தப்பித்துக் கொள்வேன்
பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடவே
இயேசுவே எந்தன் பாதுகாவலாம்
2. நோயின் கொடுமையில் வாடுகையில்
இயேசுவே என்று சுகம் பெறுவேன்
பேயின் கொடுமை பெருகுகையில்
இயேசுவே என்று துரத்திடுவேன்
3.தடை பெற்ற காரியம் நடந்திடவே
இயேசுவே என்று செயல்படுவேன்
வறுமையும் பாரமும் பெருகுகையில்
இயேசுவே என்று வளம் பெறுவேன்
4. எதிரான பலவித போராட்டத்தில்
இயேசுவே என்று நிலை பெறுவேன்
தவித்திடச் செய்திடும் தனிமையிலும்
இயேசுவே என்று துணை பெறுவேன்
Details
- Numeric ID
- 2284
- Song ID
- yesu-endru-solluvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0