Yesu Kiristhu Naadhar ஏசு கிறிஸ்து நாதர்
ஏசு கிறிஸ்து நாதர்
Lyrics
யேசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்.
1.மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூபுடையார்;
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்;
2.வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதகள்மேல்
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;
3.பாவத்தில் கோபம் வைப்பார்!
பாவிமேல் கோபம் வையார்,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்;
4.தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்;
5.அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்.
Details
- Numeric ID
- 5881
- Song ID
- yesu-kirusthu-naathar-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 1
- Downloads
- 1