Lyrics
இயேசு நாதனைப் போற்றிடுவோம்
புகழ்ந்து நாதனைப் போற்றிடுவோம்
புகழ்வோமே
ஆ ஆ ஆனந்தம் அன்பர் சந்நிதியில்
ஆசீர்வாதம் என்றும் பெருகிறதே
அதை நினைத் தகமகிழ்ந்துமே
அடிபணிந் தடியவரும்மை
கருணையினாலெமை அலங்கரித்திடவும்
கனிந்து துணை தினமும் புரிந்திடவும்
வரும் பெரும் வினைகளனைத்தும்
அறும்படி அருளினதினால்
வருடம் முழுவதிலும் வழுவவிடாது
வாழும் வழிகளிலே வளரச் செய்து
பலமுடைய புயமுடனே
பரன் பராபரித்திடவே
பாதையில் பாடுகள் பலுகி வந்திடினும்
வாதை பிணி எமை வருத்திடினும்
அதைரியம் அணுகி வரினும்
அனுதினமும் துதித்திடுவேன்
அன்பில் அனுதினம் அடியவர் நிலைத்து
அண்டி நடத்திடும் ஆண்டதிலும்
அநாதியும் அந்தமும் நீரே
அனாதையின் சொந்தமும் நீரே
Details
- Numeric ID
- 43
- Song ID
- yesu-naathanai-potriduvom-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1