Lyrics
யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ
இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே.
நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்.
கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும்.
Details
- Numeric ID
- 5878
- Song ID
- yesu-nasariyinathipathiyae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 1
- Downloads
- 1