Yesu Raja Nandri Endru இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
Unknown
Lyrics
Lyrics
இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை
வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)
என்னையாளும் ராஜாவே உம்
அன்பின் எல்லையில்லையே
வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)
பொய்யுரையா என் தேவனே நீர்
மனம் மாறுவதில்லையே
வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
எனக்காக யாவையும் நீர்
செய்து முடிக்கின்றீர்
பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே(நீர்)
இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
இரக்கத்தில் முடிவில்லையே
பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே(நீர்)
என் நீதியால் இல்லையே உம்
சுத்த கிருபையினாலே
Details
- Numeric ID
- 7782
- Song ID
- yesu-raja-nandri-endru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0