Lyrics
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி
துதித்திடுவேன் இயேசுவே உம் பார்வையால்
நான் புதிதாகிறேனே உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
1. இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்
நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
2. மகிமையே என்னை மறந்திருந்தால்
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்
உம் கரங்களால் எனை எடுத்ததால்
புது வாழ்வு பெற்று கொண்டேன்
உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
3. குயவனே நீர் வனையாதிருந்தால்
குப்பையாய் கிடந்திருப்பேன்
தேவனே எனை தொடாதிருந்தால்
உயிரை தொலைத்திருப்பேன்
உடைந்த நான் உங்க உள்ளங்கையில் உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
Details
- Numeric ID
- 4475
- Song ID
- yesuvae-um-paasathal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0