Lyrics
இயேசுவே நீர் செய்த
நன்மைகள் நினைத்தால்
துதியாமல் இருப்பேனோ – 2
(எந்தன்) வாழ்நாளெல்லாம்
உம்மை நன்றியால் துதிப்பேன் - 2
ஏற்றுக்கொள்ளும் தெய்வமே (2)
1. கல்வாரி மலையில் எனக்காக
உந்தன் உயிரையும் ஈந்தீரே
என் பாவங்கள் சுமந்தீரே - 2
என்னை உம் சொந்தமாக்கினீரே
உம் பாதம் சரணம் ஐயா (2)
2. தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
கைவிட மாட்டேன் என்றீர்
உன்னை விட்டு விலகுவதில்லை என்றீர்
நன்ர் உந்தன் துணையாய் இருப்பேனென்றீர்
என்றும் உம்மை நான் மறப்பேனோ -ஐயா
3. உந்தன் வருத்தம் பாரத்தை யாவும்
என்மேல் வைத்திடு என்றீர்
நான் உனக்காய் சுமப்பேன் என்றீர்
என் வாழ்க்கையில் இன்பம் தந்தீர்
உம்மைத் துதியாமல் இருப்பேனோ
Details
- Numeric ID
- 2226
- Song ID
- yesuve-neer-seitha-nanmaigal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0