Lyrics
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா)
2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்
3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால்
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன்
Details
- Numeric ID
- 1
- Song ID
- yesuvin-marbil-naan-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 2