Lyrics
யோபு போல் புடமிடப்பட்டாயோ
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்
தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)
ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்
பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2
பாதம் ஒன்றே வேண்டும் -இந்த
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்
பாதம் ஒன்றே வேண்டும்
2. தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன்
சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ
கர்த்தரையே நிந்திக்காமலே –(2) உன்
நித்திரையிலும் அவரைப் பாடு –(2)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறையுண்டு நீ
சொல்மனமே… (2)
யோபு போல் புடமிடப்பட்டாலும்
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும்
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8
Details
- Numeric ID
- 3431
- Song ID
- yobu-poel-pudamidapattaayoe-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0